search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிணம்
    X
    பிணம்

    போடியில் தூக்கில் தொங்கிய நிலையில் கேரள வாலிபர் பிணம்

    போடியில் மரத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் தொங்கியது. போலீசார் விசாரணையில் அவர் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி மணப்பட்டியில் பஸ்நிறுத்தம் உள்ளது. இதன் பின்புறம் ஒரு மரத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்தவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகிஇருக்கும் என்பதால் அவரது உடல் அழுகி காணப்பட்டது. இதையடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் தூக்கில் பிணமாக தொங்கியவர் கேரளமாநிலம் அடிமாலியை சேர்ந்த மோகன்(40) என்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக மோகன் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×