என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரக்கோணம் அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
ராணிப்பேட்டை:
அரக்கோணம் அடுத்த வேடல் கோட்ட கண்டிகை ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது(60). இவரது மகன் வெங்கடேசன் (28) ஆகியோருக்கும் அரக்கோணம் அடுத்த வேடல்வழி கோட்ட கண்டிகை கிராமத்தை சேர்ந்த மோகன்ரெட்டி (60) விவசாயி என்பவருக்கும் இடையே புறம்போக்கு நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோர் மோகன் ரெட்டியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வெங்கடேசன், ஆறுமுகத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சீனிவாசன் கொலையாளிகள் மகனுமான ஆறுமுகம், வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ 7,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ரவிக்குமார் ஆஜராகியிருந்தார். வெங்கடேனுக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்