என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செங்குன்றம் அருகே ரசாயன குடோனில் தீ விபத்து
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் வரலட்சுமி நகர், மாதவரம்- அருமந்தை சாலை அருகே மாதவரத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ரசாயன குடோன் உள்ளது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் மதில் சுவர் போடப்பட்டு இந்த குடோன் அமைந்து உள்ளது.
இங்கு பெயிண்ட் பேரல்கள், தின்னர் மற்றும் ரசாயன கேன்கள் ஆகியவை இறக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் குடோனில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர், செம்பியம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
பேரல்கள் வெடித்து சிதறியதால் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு தீப்பிளம்பு பரவியது. அருகில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீயணைப்பு போலீசார் விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த ரசாயன பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்