search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஒசூரில் தீக்காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    ஒசூரில் கியாஸ் கசிவு ஏற்பட்டதில் தீக்காயம் அடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நெசவாளர் தெருவில் வீடு ஒன்றில் கடந்த 13 -ம் தேதியன்று கியாஸ் கசிவு தீப்பற்றியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமசேகர் (வயது35), ஷீலா(25), புவணகிரி (8), தன்யா (6) ஆகிய நான்கு பேர் தீக்காயங்களுடன் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    இன்று அதிகாலை சோமசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு லேசான காயங்கள் மட்டுமே என்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×