search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    பாகலூர் அருகே மினரல் வாட்டர் கம்பெனி சூப்பர்வைசர் மாயம்

    பாகலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மினரல் வாட்டர் கம்பெனி சூப்பர்வைசர் மாயமானார். இது குறித்த அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள லிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத்குமார் (வயது 39). இவர் அங்குள்ள ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இவரது மனைவிக்கும், இவருக்கு தகராறு இருந்து வந்துள்ளது. 

    இந்நிலையில் கடந்த மாதம் 17-ம்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து இவரது மனைவி மஞ்சுளா (வது 36) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×