என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே கணவனை அடித்து கொன்ற மனைவி கைது
Byமாலை மலர்19 Feb 2020 10:23 AM GMT (Updated: 19 Feb 2020 10:23 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே குடிபோதையில் டார்ச்சர் செய்த கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சேர்மலை(55). டிராக்டர் ஓட்டுனரான இவருக்கு சுருளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
2 மகன்களும் வெளியூரில் ஜே.சி.பி ஆப்ரேட்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்து சின்னமனூர் அருகில் உள்ள கன்னிசேர்வைபட்டியில் உள்ளார். சேர்மலையும், அவரது மனைவி மட்டும் கடமலைக்குண்டுவில் தனியாக வசித்து வந்தனர்.
சேர்மலை தினமும் குடித்துவிட்டு தனது மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சுருளியம்மாள் கணவரை அடித்தார். இதில் சேர்மலை மயங்கி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சேர்மலையை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேர்மலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுருளியம்மாளை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சேர்மலை(55). டிராக்டர் ஓட்டுனரான இவருக்கு சுருளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
2 மகன்களும் வெளியூரில் ஜே.சி.பி ஆப்ரேட்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்து சின்னமனூர் அருகில் உள்ள கன்னிசேர்வைபட்டியில் உள்ளார். சேர்மலையும், அவரது மனைவி மட்டும் கடமலைக்குண்டுவில் தனியாக வசித்து வந்தனர்.
சேர்மலை தினமும் குடித்துவிட்டு தனது மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சுருளியம்மாள் கணவரை அடித்தார். இதில் சேர்மலை மயங்கி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சேர்மலையை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேர்மலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுருளியம்மாளை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X