என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆட்டோ மோதி விபத்து- கோவை கல்லூரி மாணவர் பலி
Byமாலை மலர்19 Feb 2020 10:17 AM GMT (Updated: 19 Feb 2020 10:17 AM GMT)
ஆட்டோ மோதிய விபத்தில் கோவை கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் செவ்வாய்ப்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் கிரிதரண் (வயது 22).
இவர், கோவை, சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் தொழில் நுட்ப கல்லூரியில் பி.டெக் பட்டப்படிப்பு படித்து வந்தார். விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த கிரிதரண் நேற்று இரவு, புல்லட்டில் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவாயில் அருகில் சென்றபோது புல்லட் மீது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் புல்லட் வேகமாக சாலையில் சரிந்தது. இதில் கிரிதரணுக்கு தலையில் பலத்த அடிபட்டது.
வாகன ஓட்டிகள், பொதுமக்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிரிதரணுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கிரிதரணை சேர்த்தனர். நள்ளிரவில் அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து, செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரிதரண் சென்ற புல்லட் மீது மோதிய ஆட்டோவை, சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் கிரிதரண் (வயது 22).
இவர், கோவை, சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் தொழில் நுட்ப கல்லூரியில் பி.டெக் பட்டப்படிப்பு படித்து வந்தார். விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த கிரிதரண் நேற்று இரவு, புல்லட்டில் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவாயில் அருகில் சென்றபோது புல்லட் மீது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் புல்லட் வேகமாக சாலையில் சரிந்தது. இதில் கிரிதரணுக்கு தலையில் பலத்த அடிபட்டது.
வாகன ஓட்டிகள், பொதுமக்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிரிதரணுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கிரிதரணை சேர்த்தனர். நள்ளிரவில் அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து, செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரிதரண் சென்ற புல்லட் மீது மோதிய ஆட்டோவை, சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X