search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பாகூர் அருகே தனித்தனி விபத்துகளில் 2 பேர் பலி

    பாகூர் அருகே தனித்தனி விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் சுப்பையாநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70) ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் ஆதிங்கப்பட்டு ரோட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது ஆதிங்கப்பட்டு காலனியை சேர்ந்த சிலம்பு (36) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஆறுமுகம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகத்தை பாகூர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் பாகூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (57). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பாகூர் பரிக்கல்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சோரியாங்குப்பத்தை சேர்ந்த வரதராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கனகராஜ் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை பாகூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர் மூளைச்சாவு அடைந்து பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த 2 விபத்து குறித்தும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் ஏட்டுக்கள் செஞ்சிவேல், வெங்கடேஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×