search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருவள்ளூரில் ரெயில் மோதி கல்லூரி மாணவர் பலி

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவர் மீது ரெயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ராஜாஜிபுரம் இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மிதுன் (வய18).

    இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இன்று காலை அவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மிதுன் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×