search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி ஊழியர்
    X
    வங்கி ஊழியர்

    வங்கி ஊழியரின் காம லீலைகளை அம்பலப்படுத்திய மனைவி: செல்போன்களில் 200 ஆபாச வீடியோக்கள்

    திருச்சி அருகே வங்கி ஊழியரின் செல்போன்களில் 200 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (வயது 36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப் பெரம்பூர் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு மணப்பாறையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நகை, பணம் உள்ளிட்டவை பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது.

    மணப்பாறையில் குடும்பம் நடத்த தொடங்கிய புதுமண தம்பதியருக்கிடையே ஆரம்பம் முதலே வெறுப்பும், விரக்தியுமே இருந்துள்ளது. மனைவியுடன் நெருங்கி பழக மறுத்த கணவரின் செயல்பாடுகள் தாட்சருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. தன்னிடம் ஏதாவது குறை இருக்கிறதா? என்று வெளிப்படையாகவே கேட்ட மனைவியிடம் எரிந்து விழுவதையே எட்வின் ஜெயக்குமார் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இரவில் வெகுநேரம் செல்போனில் மூழ்கியிருந்த ஜெயக்குமார் திடீரென மேலும் 50 பவுன் நகை வரதட்சணையாக வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இல்வாழ்க்கை பிரச்சினைக்கு கூடுதல் வரதட்சணை ஒரு காரணமாக இருக்காது என்பதை உறுதிப்படுத்திய தாட்சர், கணவருக்கு தெரியாமல் அவரது செல்போனை பார்த்த போதுதான் உண்மை வெளிவந்தது.

    அறுவறுக்கத்தக்க மற்றும் ஆபாசமான வீடியோக்கள் அந்த செல்போன் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தது. பல பெண்களின் வங்கி கணக்கு குறித்த விபரங்களும் அதில் பதிவாகி இருந்தன. வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள், அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களின் அங்க அசைவுகள் குறித்த ஆபாச வீடியோக்களும் அதில் இருந்தன.

    இதனை தனது மாமியார் லில்லிஹைடா, நாத்தனார் நிர்மலா மேரி, உறவுக்கார பெண் ரீட்டா ஆகியோரிடம் கூறியபோது அவர்கள் அதனை பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் லில்லிஹைடா, ரீட்டா ஆகியோருக்கிடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்ததை அறிந்த தாட்சர் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

    இந்த செயல்களுக்கு கணவருடன் வங்கியில் பணியாற்றும் தேவி பிலோ மினா என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவர் லோன் வழங்கும் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர் எப்போதாவது தான் வங்கிக்கு வருவது வழக்கம்.

    பல்வேறு வகைகளில் லோன் வாங்குவதற்காக வங்கிக்கு வருகை தரும் பெண் வாடிக்கையாளர்களை தேவி பிலோமினாள் மூளைச் சலவை செய்து அவர்களை செக்சுக்கு உட்படுத்தி, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

    தனது வி‌ஷயத்தை மனைவி அறிந்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். மனைவி போலீசுக்கு போனால் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீனும் பெற்றுள்ளார்.

    ஜெயக்குமார் 15 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் கணவருக்கு தெரியாமல் எடுத்த 2 செல்போன்களில் மட்டுமே 200 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றிருந்தன. மற்ற செல்போன்களில் இருந்த படங்களை ஜெயக்குமார் அவசரம், அவசரமாக அழித்துள்ளார். அதனை பறிமுதல் செய்யவேண்டும் என்று தகுந்த ஆதாரங்களுடன் தாட்சர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    அதன் அடிப்படையிலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெயக்குமார், அவரது தாய், சகோதரி, உறவுக்கார பெண் மற்றும் வங்கியில் உடன் வேலை பார்க்கும் தேவி பிலோமினாள் ஆகிய 5 பேரையும் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கணவர் மீதான குற்றச்சாட்டுக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஜெயக்குமாரின் மனைவி தாட்சரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் பல அதிர்ச்சி தகவல்களை கூறினார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    எனது கணவரின் நடவடிக்கைகள் திருமணமான ஒரு சில நாட்களிலேயே சந்தேகத்தை ஏற்படுத்தியது. என்னுடன் நெருங்கி பழகாமல் இருந்த அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். நான் கைப்பற்றிய இரண்டு செல்போன்களில் மட்டும் 200 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. அதில் ஒரு வீடியோவில் ஒரு பெண் இறந்து கிடப்பது போன்று தோன்றியது. அருகில் எனது கணவர் நின்று கொண்டிருந்தார்.

    ஏற்கனவே விராலிமலையை சேர்ந்த புவனா என்ற பெண் எனது கணவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அதன் மூலம் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். அதனை என் கணவரிடம் கூறிய போது, கர்ப்பத்தை கலைக்குமாறு ஜெயக்குமார் வற்புறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து என் கணவர் அவரை கொலை செய்து இருக்கலாம் என நான் சந்தேகப்படுகிறேன்.

    இவை அனைத்தையும் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் ஆதாரத்துடன் கூறியுள்ளேன். ஆனாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.

    நேற்று நான் எனது கணவர் வேலை பார்க்கும் விராலிமலை வங்கி கிளைக்கு சென்று விசாரித்தேன். அப்போது வங்கி அதிகாரிகள் எங்களுக்கே தற்போதுதான் இந்த பிரச்சினை குறித்து தெரியவந்ததாக கூறினர். மேலும் உங்கள் கணவரை வங்கி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    அதேபோல் மணப்பாறையில் உள்ள கணவரின் வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. அக்கம் பக்கத்தினரிடம் கேட்டபோது அவர்கள், ஜெயக்குமாரின் மனைவி சென்னையில் வசிப்பதாகவும், அவரை பார்க்க சென்றிருப்பதாகவும் கூறினர். அதன்பிறகுதான் தாட்சர், நான்தான் அவரது மனைவி என்று தெரிவித்தேன்.

    மேலும் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களை எனது கணவர் அவர்களுக்கே தெரியாமல் ஆபாசமாக எடுத்துள்ள படங்களையும் காண்பித்தேன். அதிர்ச்சி அடைந்த அவர்கள் உங்கள் கணவருக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று கூறினர். ஆனால் ஒரு சிலர் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தினமும் இங்குள்ள வீட்டிற்கு வந்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×