என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரும்பாலை அருகே சூதாடிய 6 பேர் கைது
Byமாலை மலர்18 Feb 2020 2:55 PM GMT (Updated: 18 Feb 2020 2:55 PM GMT)
பெரும்பாலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாடி கொண்டிருந்த 6 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:
பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு சூதாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேப்பமரத்து கொட்டாய் அடுத்துள்ள மாரியம்மன் கோவில் அருகில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் அர்த்தநாரி (வயது 32), கண்ணன் (35), குமரவேல் (43), அண்ணாமலை (27), ராஜமாணிக்கம் (33) மற்றும் செல்வமாணிக்கம் (32) ஆகிய 6 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 52 சீட்டுகள் மற்றும் ரூ.1,200 பணத்தை பறிமுதல் செய்தனர். பெரும்பாலை போலீசார் அந்த 6 பேரிடமும் நடத்திய விசாரணையில் பென்னாகரம் அடுத்துள்ள பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X