search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் பிணம்
    X
    வாலிபர் பிணம்

    முத்துப்பேட்டை: கோரையாற்றில் மிதந்த வாலிபர் பிணம்

    முத்துப்பேட்டையில் கோரையாற்றில் இன்று காலை வாலிபர் பிணமாக மிதந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு குத்பா பள்ளி வாசல் எதிரே செல்லும் கோரையாற்றில் இன்று காலை அப்பகுதியை கடந்து சென்றவர்கள் பார்த்தபோது இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்ததை கண்டு முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில் அந்த இளைஞர் எலக்ட்ரீசியன் மற்றும் சமையல் வேலை பார்த்து வந்த முத்துப்பேட்டை தெற்குதெரு காதர் முகைதீன் மகன் அக்பர் அலி(38) என்று தெரியவந்தது. இதனையடுத்து அக்பர் அலியின் சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அக்பர் அலி எப்படி இறந்தார்? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். அக்பர் அலிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
    Next Story
    ×