search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கரூரில் மது விற்ற முதியவர் கைது

    கரூரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருட்டுத்தனமாக மதுவிற்ற முதியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம் பாளையம்:

    கரூர் மாவட்டம், புகளுர், ஹைஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது62). இவர் அங்குள்ள பேருந்து நிலையம் அருகே திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். 

    தகவலின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக பழனியப்பனை பிடித்த போலீசார் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×