search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

    கோவை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கணுவாய் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது19).தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்வதற்காக சோமனூர் ரெயில்வே பாலம் அருகே நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அப்போது அவர் சத்தம் போட்டு பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த பொத்துராஜா (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×