என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் 2-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டம்
Byமாலை மலர்18 Feb 2020 10:48 AM GMT (Updated: 18 Feb 2020 10:48 AM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை வாபஸ்பெறக்கோரி சேலத்தில் 2-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதனை கண்டித்து சேலம் கோட்டை மேல்தெரு பள்ளி வாசல் அருகில் உள்ள சாலையில் முஸ்லிம் பெண்கள் சார்பில் நேற்று போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அவர்கள் விடிய-விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர்.
அதன்படி இன்று 2-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதனை கண்டித்து சேலம் கோட்டை மேல்தெரு பள்ளி வாசல் அருகில் உள்ள சாலையில் முஸ்லிம் பெண்கள் சார்பில் நேற்று போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அவர்கள் விடிய-விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர்.
அதன்படி இன்று 2-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X