search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    கோவையில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கோவை:

    மத்திய அரசு சமீபத்தில் கியாஸ் விலையை உயர்த்தியது. இதனை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எம் .என். கந்தசாமி, மாநில பொதுச்செயலாளர் வீனஸ்மணி, முன்னாள் மேயர் வெங்கடாசலம், கணபதிசிவகுமார், திருமூர்த்தி, வக்கீல் கருப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சவுந்தர் குமார், பச்சைமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் காயத்ரி, உமா மாகேஸ்வரி, ஜெயபால், குருசாமி, துரை, கருணாகரன், ராம நாகராஜ் ,சாந்தகுமார், பாஸ்கர், போஸ் குணசேகரன், லட்சுமிபதி தமிழ்செல்வன், சாய்சாதிக், ராமச்சந்திரன், சீனிவாசன் தாமஸ், வர்கீஸ், பரமசிவம், பரம நந்தகோபால், கார்த்திக் ,சிவகுமார், வினோத்குமார், பாசமலர் சண்முகம், தங்கம் பழனிசாமி, மோகன்ராஜ், ஷேக் முகமது, துளசி ராஜ், ஜெரோம் ஜோசப், சந்திரன், பாபு, நாகராஜ், பிரபு, விஜயகுமார், அசோக் குமார், ரூபர்ட், ஆரோக்கியராஜ், ஜேம்ஸ், குமார், அசோக் ,சக்திவேல், மருதூர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி பார்க் முன் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார்.

    இதில் நிர்வாகிகள் மகேஷ் குமார், அழகு ஜெயபால், எச்.எம்.எஸ். ராஜாமணி, முருகேசன், ஐ.என்.டி.யூ.சி. செல்வம், விஜய குமார், நவீன் குமார், வெள்ளிங்கிரி, பழையூர் செல்வராஜ், கிருஷ்ணன், ராயல் மணிகண்டன், லாலி ரோடு செல்வம், பேரூர் மயில், ஆறுச்சாமி, கணபதி அசோக், ரங்கசாமி, அயூப்கான், தீரன் கந்தசாமி, பாரி, சுடர் விழி, ஆகாஷ், சக்தி சதிஷ், சிவகாமி, காட்டூர் சோமு, பார்தீபன், கணேசன், சகாயராஜ் கணபதி அய்யப்பன், விவின், நந்த குமார் மணிகண்டன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×