என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே மதுபாரை சூறையாடிய 7 பேர் கும்பல் கைது
கவுண்டம்பாளையம்:
கோவை - மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளக்கிணர் பிரிவில் இருந்து சரவணம் பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. மது குடிக்க வந்தவர்களில் சிலர் பார் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மது குடிக்க வந்த ஒருவரை பார் ஊழியர்கள் அடித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
கடையில் இருந்து சென்ற அவர் திடீரென தனது நண்பர்களுடன் ஆட்டோவில் உருட்டு கட்டைகளை எடுத்து வந்தார். அவர்கள் மது பாரில் இருந்த மேஜை, நாற்காலி, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினார்கள்.
மேலும் பார் ஊழியர்களையும் உருட்டு கட்டையால் தாக்கினார்கள். இதில் கேஷியர் அய்யனார், ஊழியர்கள் ரோகித், கோவில் பிள்ளை, தங்கசாமி, வினோத் ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் அக்கும்பல் ஆட்டோவில் தப்பி சென்று விட்டது.
இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பாரை சூறையாடியவர்கள் 8 பேர் என்பது தெரிய வந்தது. இதில் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி வீதி மதிவாணன் (24), அபிஷேக் (20), ஹரிஷ் (19), விஷ்ணுகுமார் (22).ஜீவா நகர் ரகுபதி (21), கண்ணன் (21),உழைப்பாளர் வீதி சக்திவேல் (29) ஆகிய 7 பேரை துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் கைது செய்தார். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்