search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பொள்ளாச்சி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    பொள்ளாச்சி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி வைகை நகரைச் சேர்ந்தவர் ஜெபராஜ். இவரது மனைவி சாந்தி (40). இவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை சரியான நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாததால் மனவேதனையுடன் காணப்பட்டார்.

    இதனால் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×