search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மதுரையில் 3 பெண்களிடம் நகை பறிப்பு

    மதுரையில் 3 பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    சாத்தூர் காமராஜர் புரத்தை சேர்ந்த சீமோன் மனைவி சத்தியவாணி (வயது 55). இவர் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக மதுரை வந்தார்.

    சுப்பிரமணியபுரம் 2-வது வீதியில் சத்தியவாணி நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சத்தியவாணி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெற்குவாசல் ராமச்சந்திரபுரம் போத்திராஜ் மனைவி சமீனா, கீழவெளி வீதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலிச்செயினை பறித்துச் சென்றனர்.

    கூடல்புதூர் பொதிகை நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அழகு. இவரது மனைவி ஜெயலட்சுமி (44) இவர் பொதிகைநகர் பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து கீரைத்துறை, கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம் மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிப்பைச் சேர்ந்த மணி மனைவி மீனா (40). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.

    இதனை பயன்படுத்தி யாரோ சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்த தையல் எந்திரம், 3 செல்போன், 2 லேப்-டாப் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×