என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆவின் டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்
சென்னை:
ஆவின் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளை செய்து வருகிறது . மாநிலம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் தினமும் வினியோகிக்கப்படுகிறது.
பால் சப்ளை செய்வதற்காக 2 ஆண்டுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும் புதிய ஒப்பந்தம் போடவில்லை.
பழைய வாடகை ஒப்பந்தத்தில் லாரிகள் இயக்கப்படுவதால் லாரி உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திப்பதாகவும், மறு டெண்டர் மூலம் வாடகையை உயர்த்த வேண்டும் என்றும் கூறி கடந்த 14-ந்தேதி நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
கடந்த 3 நாட்களாக நடந்த போராட்டம் காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளையை அதிகாரிகள் சமாளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆவின் டேங்கர் லாரிகள் வழக்கம் போல் ஓடத் தொடங்கி உள்ளன. இதனால் இனி ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்