search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெரியமேட்டில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு டிரைவர் பாலியல் தொல்லை

    சென்னை பெரியமேட்டில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    ஆந்திர மாநிலம் குப்பம் லெட்சுமி புரத்தை சேர்ந்தவர் நந்தினி (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை குன்றத்தூரில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு செல்ல கீழ்ப்பாக்கத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டார்.

    ஆட்டோ பெரியமேட்டில் இருந்து அல்லிகுளம் வழியாக செல்லும் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் வெளிச்சமும் குறைவாக இருந்தது. மக்கள் போக்குவரத்தும் இல்லை.

    அதை பயன்படுத்தி தனியாக இருந்த நந்தினியிடம் ஆட்டோ டிரைவர் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளார். அவரது செக்ஸ் தொல்லையால் அதிர்ச்சி அடைந்த நந்தினி கூச்சல் போட்டுள்ளார். ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து உதவி கேட்டு கத்தி இருக்கிறார்.

    இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் நந்தினியில் உடமைகளை ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.

    தனியாக பதட்டத்துடன் ஓடி வந்த நந்தினியை பார்த்ததும் அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை பெரியமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். இன்ஸ்பெக்டர் செல்லப்பா நந்தினியிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்துள்ளார்.

    பின்னர் வேப்பேரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். பெண் போலீசார் புகாரை பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை பார்த்து ஆட்டோ டிரைவரை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
    Next Story
    ×