search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளஹஸ்தி கோவில்
    X
    காளஹஸ்தி கோவில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை, காளஹஸ்திக்கு 250 சிறப்பு பஸ்கள்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக திருவண்ணாமலை, காளஹஸ்திக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குனர் இரா.முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகாசிவராத்திரி விழா வரும் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக விழுப்புரம்- மேல்மலையனூர், சென்னை- திருவண்ணாமலை, சென்னை- ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் குடியாத்தம்- மொகிலி ஆகிய வழித்தடங்களில் வரும் 21 மற்றும் 22-ந்தேதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×