search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுவையில் குடிபோதையில் ரகளை செய்த 2 பேர் கைது

    புதுவையில் குடி போதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    கருவடிக்குப்பம் மெயின்ரோட்டில் சாராயக்கடை அருகே நேற்று ஒருவர் குடிபோதையில் நின்று கொண்டு அவ்வழியே செல்வோரை ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த லாஸ்பேட்டை போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வைத்திக்குப்பம் வன்னியர் வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது50) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் சாரம் அவ்வை திடலில் குடிபோதையில் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை கோரிமேடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அறிவழகன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×