என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் குடிபோதையில் ரகளை செய்த 2 பேர் கைது
Byமாலை மலர்17 Feb 2020 4:17 PM GMT (Updated: 17 Feb 2020 4:17 PM GMT)
புதுவையில் குடி போதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
கருவடிக்குப்பம் மெயின்ரோட்டில் சாராயக்கடை அருகே நேற்று ஒருவர் குடிபோதையில் நின்று கொண்டு அவ்வழியே செல்வோரை ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த லாஸ்பேட்டை போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வைத்திக்குப்பம் வன்னியர் வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது50) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் சாரம் அவ்வை திடலில் குடிபோதையில் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை கோரிமேடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அறிவழகன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X