search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கிருஷ்ணகிரியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

    கிருஷ்ணகிரியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிவீதி பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 48). ஊசி, பாசிமணி வியாபாரி. இவருக்கு ஜெரினா (வயது 45) என்ற மனைவியும், 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். விஜயன் தற்போது தர்மபுரி மாவட்டம் செம்மாண்டப்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 

    இந்த நிலையில் விஜயன் தர்மபுரி பஸ்நிலையத்தில் ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்து வந்தார். மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பிரச்சனை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். எனவே மனமுடைந்து காணப்பட்ட விஜயன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவலறிந்த மதிகோண்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×