search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வடமதுரை அருகே காதல் மனைவியை மீட்க கோரி கணவர் போலீசில் புகார்

    வடமதுரை அருகே காதல் மனைவியை மீட்க கோரி கணவர் புகார் அளித்துள்ளதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மோர்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜன் (வயது25). ஜே.சி.பி. டிரைவர். இவருக்கும் காணப்பாடியை சேர்ந்த சங்கீதா (19) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

    இதனை அறிந்ததும் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து சங்கீதாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என அஞ்சிய காதல் ஜோடி கடந்த 20-ந் தேதி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்தனர்.

    பெற்றோர் சம்மதம் பெற்று ஒன்றாக வசிக்கலாம். அதுவரை இருவரும் அவரவர் வீடுகளில் தங்க முடிவு செய்தனர்.

    இந்த வி‌ஷயம் சங்கீதாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவரை ரகசிய இடத்தில் தங்க வைத்தனர். அங்கிருந்து செல்போன் மூலம் செல்வராஜனை தொடர்பு கொண்ட மனைவி தன்னை மீட்குமாறு கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜன் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×