search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தட்டார்மடம் அருகே கூடுதல் விலைக்கு மது விற்ற பெண் கைது

    தட்டார்மடம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    சாத்தான்குளம்:

    தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை மற்றும் போலீசார் நேற்று முதலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெரியதாழை சேவியர் காலனியை சேர்ந்த சேகரின் மனைவி கவிதா (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கவிதாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×