என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவேங்கடம்-கடையநல்லூரில் விஷம் குடித்த 2 மாணவர்கள் பலி
நெல்லை:
திருவேங்கடம் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் காளிராஜ். இவரது மகன் அஜய் (வயது16). இவர் திருவேங்கடத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நன்றாக படிக்காததால் அவரை பெற்றோர் கண்டித்தனர்.
இதில் மனம் உடைந்த அஜய் கடந்த 14-ந்தேதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகன் அய்யனார் (21) பட்டப்படிப்பு படித்து வந்த இவருக்கு நன்றாக படிக்க முடியவில்லை. இதனால் நேரம் சரியில்லை வீட்டை மாற்ற வேண்டும் என்று சமீபத்தில் மேல கடையநல்லூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடிவந்தனர்.
ஆனால் அய்யனார் தனக்கு இந்த வீடு பிடிக்கவில்லை என்று கூறி தகராறு செய்து வந்தார். இதில் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்தார். அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்