என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பவர் வடகரையில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
Byமாலை மலர்17 Feb 2020 10:16 AM GMT (Updated: 17 Feb 2020 10:16 AM GMT)
சாம்பவர் வடகரையில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாம்பவர் வடகரை:
சாம்பவர் வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் விஜய் (வயது26). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். விஜய்க்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஊர் மேலழகியான் குளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது குளித்து கொண்டிருக்கும் போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நீரில் மூழ்கி விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாம்பவர் வடகரை போலீசார் விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X