என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறில் திருமணமான 2 வருடத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்17 Feb 2020 9:58 AM GMT (Updated: 17 Feb 2020 9:58 AM GMT)
திருவையாறில் திருமணமான 2 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு வடக்கு வீதியை சேர்ந்த ரிபாபேகம் மகள் கிலாபானு(வயது27). இவருக்கும் நெய்வேலி ராஜாஜி சாலையை சேர்ந்த உறவினரான ஜாபர்உசேன் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 13-ம் தேதி கிலாபானு திருவையாறில் உள்ள தனது தாய் வீட்டுக்கு தனியாக வந்த அவர் திடீரென மாயமானார். இது பற்றி அவரது பெற்றோர் திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் புகார் செய்யப்பட்ட மறுநாளே கிலாபானு மீண்டும் வீடு திரும்பி விட்டார்.அதன்பின்னர் அவர் தனது தாயாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டுக் கிலாபானு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ‘கிலாபானு உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது பற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக கிலாபானு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 2 ஆண்டுகனே ஆவதால் ஆர்.டி.ஓவும் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவையாறு வடக்கு வீதியை சேர்ந்த ரிபாபேகம் மகள் கிலாபானு(வயது27). இவருக்கும் நெய்வேலி ராஜாஜி சாலையை சேர்ந்த உறவினரான ஜாபர்உசேன் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 13-ம் தேதி கிலாபானு திருவையாறில் உள்ள தனது தாய் வீட்டுக்கு தனியாக வந்த அவர் திடீரென மாயமானார். இது பற்றி அவரது பெற்றோர் திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் புகார் செய்யப்பட்ட மறுநாளே கிலாபானு மீண்டும் வீடு திரும்பி விட்டார்.அதன்பின்னர் அவர் தனது தாயாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டுக் கிலாபானு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ‘கிலாபானு உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது பற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக கிலாபானு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 2 ஆண்டுகனே ஆவதால் ஆர்.டி.ஓவும் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X