என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வீராம்பட்டினத்தில் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்- மீனவர் கைது
பாகூர்:
வீராம்பட்டினம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது36). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வம் (50). இருவரும் மீனவர்கள். இவர்கள் 2 பேர் குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று செல்வம் தனது வாகனத்தை சுந்தர் வீட்டையோட்டி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தரின் தாய் சரோஜா (65) வீட்டுக்கு செல்ல இடையூறாக இருப்பதால் அந்த வாகனத்தை அப்புறப் படுத்துமாறு கூறினார்.
இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் தகாத வார்த்தைகளால் திட்டி சரோஜாவை தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சரோஜா மயங்கி விழுந்தார். உடனடியாக சரோஜாவை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து சுந்தர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் வழக்குபதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்