என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முஸ்லிம்கள் போராட்ட பின்னணியில் தி.மு.க. உள்ளது: இல.கணேசன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்17 Feb 2020 2:12 AM GMT (Updated: 17 Feb 2020 2:12 AM GMT)
பல்வேறு முறையில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். இதன் பின்னணியில் தி.மு.க. உள்ளது என்று தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை :
தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஓம் சக்தி விநாயகர் கோவிலில் பா.ஜ.க. மத்திய சென்னை(கிழக்கு) மாவட்டம் சார்பில் ஏழைகளுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர். இதைத்தொடர்ந்து இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுக்க கலந்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படும். முறையான அறிவிப்பு ஒரு வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது. முஸ்லிம்கள் போராட்டத்தால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க தமிழக அரசு 6 உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது பாராட்டுக்குறியது. பல்வேறு முறையில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். இதன் பின்னணியில் தி.மு.க. உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க. உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஓம் சக்தி விநாயகர் கோவிலில் பா.ஜ.க. மத்திய சென்னை(கிழக்கு) மாவட்டம் சார்பில் ஏழைகளுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர். இதைத்தொடர்ந்து இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுக்க கலந்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படும். முறையான அறிவிப்பு ஒரு வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது. முஸ்லிம்கள் போராட்டத்தால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க தமிழக அரசு 6 உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது பாராட்டுக்குறியது. பல்வேறு முறையில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். இதன் பின்னணியில் தி.மு.க. உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க. உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X