search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பொள்ளாச்சி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    பொள்ளாச்சி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நல்லப்பன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (32). தொழிலாளி. இவர் சொந்த செலவுக்காக நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை அவரால் சரியான நேரத்தில் திருப்பி கொடுக்க முடியவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த பாலசுப்பிரமணியம் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அன்னூர் நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன் (47). தச்சு தொழிலாளி. இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கவிதா மனவேதனையுடன் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வாழ்க் கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்குபோட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் இதுகுறித்து மனோகரனுக்கு தகவல் தெரிவித்தார். மனோகரன் சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து கவிதாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தார்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×