search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    தேனி அருகே 2 கல்லூரி மாணவிகள் மாயம்

    தேனி அருகே மாயமான 2 கல்லூரி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தம பாளையம் அனுமந்தன் பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் சங்கீதா (வயது19). உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சங்கீதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகின்றனர்.

    இதேபோல் போடி அருகே முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்தவர் மணவாளன் மகள் பேபிஷாலினி (20). இவர் போடியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த பேபிஷாலினி திடீரென மாயமானார். அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் போடி தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×