என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவேற்காடு அருகே மாடு மீது பைக் மோதி வாலிபர் பலி
பூந்தமல்லி:
திருவேற்காடு அருகே உள்ள வீரராகவபுரத்தைச் சேர்ந்தவர் நந்தீஷ் (18). தொழிலாளி.
இன்று அதிகாலை 5 மணி அளவில் பால் வாங்குவதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் ஆவடி சாலையில் காடுவெட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் குறுக்கே மாடு வந்தது. கட்டுப்பாட்டை இழந்த நந்தீஷ் மோட்டார் சைக்கிளோடு மாடு மீது மோதினார்.
இதில் கீழே விழுந்ததில் நந்தீஷ் படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெண்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
அவர்கள் பூந்தமல்லி- ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுபற்றி அவர் கூறும் போது, ‘இந்த சாலையில் சுற்றும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதேபோல் 2 பேர் ஏற்கனவே பலியாகி உள்ளனர். மாடுகளை சாலையில் அவிழ்த்துவிடுவதை தடுக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது மீண்டும் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. எனவே இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்