என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் அருகே கிணற்றில் குதித்து அரசு ஆசிரியை தற்கொலை
Byமாலை மலர்15 Feb 2020 6:13 PM GMT (Updated: 15 Feb 2020 6:13 PM GMT)
கடையம் அருகே கிணற்றில் குதித்து அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுந்தரவள்ளி (வயது 52). இவர் தீர்த்தாரப்புரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று காலையில் சுந்தரவள்ளி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அவர் மாலையில் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவருடைய உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரவள்ளியை பல்வேறு இடங்களில் தேடினர்.அப்போது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் சுந்தரவள்ளி பிணமாக மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுந்தரவள்ளியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், சுந்தரவள்ளி கடந்த 3 மாதங்களாக குடல் நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சுந்தரவள்ளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குதித்து அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுந்தரவள்ளி (வயது 52). இவர் தீர்த்தாரப்புரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று காலையில் சுந்தரவள்ளி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அவர் மாலையில் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவருடைய உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரவள்ளியை பல்வேறு இடங்களில் தேடினர்.அப்போது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் சுந்தரவள்ளி பிணமாக மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுந்தரவள்ளியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், சுந்தரவள்ளி கடந்த 3 மாதங்களாக குடல் நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சுந்தரவள்ளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குதித்து அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X