search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மோட்டார் சைக்கிள் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

    ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜாக்கமங்கலம்:

    மார்த்தாண்டம் அப்பட்டி விளை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (வயது 75).

    இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். பின்னர் அவர் ஈத்தங்காடு சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்துகொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த தங்கப்பன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளிச் சந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்தது மாவிளை பகுதியை சேர்ந்த தங்கசாமி (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலத்தை அடுத்த ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. இவரது மனைவி கலா (75).

    இவர் நேற்று வீட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கிக் கொண்டு சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் எதிர் பாராதவிதமாக கலா மீது மோதினார்.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கலாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அஜிமல் ஜெனிஸ் விசாரணை மேற்கொண்டனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்தது கடியபட்டினத்தை சேர்ந்த ஜெரால்டு என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×