என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிஏஏ-க்கு எதிராக போராட்டம்: தடியடி நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்.பி வலியுறுத்தல்
Byமாலை மலர்15 Feb 2020 12:54 PM GMT (Updated: 15 Feb 2020 12:54 PM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த மூன்றுக்கும் எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடத்தின. இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தைக் கைவிடும்படி போராட்டக்காரகளை எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை.
இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்து கற்களும் வீசப்பட்டன. தடியடி மற்றும் தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 5 பேரும், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி உள்பட காவலர்கள் 4 பேரும் காயமடைந்தனர்.
இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. எம்பி கனிமொழி கூறியதாவது:
சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தை போலீசார் உரிய முறையில் கையாளவில்லை. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் நிலைமையை தவறாக கையாண்டதால் வன்முறை ஏற்பட்டது. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டத்தை உரிய முறையில் கையாண்டு இருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X