என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சிற்றம்பலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மடத்திக்காடு மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் மாஸ்டர் என்று அழைக்கப்படும் பெரியசாமி (வயது 71).
இவர் திருச்சிற்றம்பலம் அண்ணாநகரில் காய்கறிகள் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் செய்து விட்டு மடத்திக்காடு பிரிவு சாலை வேகத்தடை அருகே அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்று விட்டது.
இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த பெரியசாமிக்கு , பாப்பா என்ற மனைவியும் மகனும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கர்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்