என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் 15 நிமிடத்தில் 5 யோகாசனம் செய்து உலக சாதனை படைத்த 3 ஆயிரம் மாணவர்கள்
Byமாலை மலர்15 Feb 2020 9:19 AM GMT (Updated: 15 Feb 2020 9:19 AM GMT)
கோவையில் 15 நிமிடத்தில் 5 யோகாசனங்களை ஒரே மாதிரி செய்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை ஹாங்காங் உலக யோகா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தலைவர் யுவ தயாளன் வழங்கினார்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி உள்ளது.
இங்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூற்றாண்டு நிறைவு நாளையொட்டி 84-வது ஆண்டாக கோவை மாவட்ட பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு வித்யாலயா நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை தாங்கினார். தொடர்ந்து 3 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
இதில் பெரியநாயக்கன் பாளையம், சர்கார் சாமகுளம் மற்றும் காரமடை ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த யோகாசனத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் 2 ஆயிரத்து 847 மாணவ மாணவிகள் பத்மாசனம், பரிவத்தாசனம், வஜ்ராசனம், உஸ்டாசனம், யோகமுத்ரசனம் ஆகிய 5 யோக ஆசனங்களை செய்து உலக சாதனை படைத்தனர்.
5 யோகாசனங்களை ஒரே மாதிரி செய்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை ஹாங்காங் உலக யோகா விளையாட்டு அமைப்பு நிறுவனத் தலைவர் யுவ தயாளன் வழங்கினார்.
இதில் மாருதி உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாய்குமார், முரளி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் தங்கமணி நன்றி கூறினார்.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி உள்ளது.
இங்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூற்றாண்டு நிறைவு நாளையொட்டி 84-வது ஆண்டாக கோவை மாவட்ட பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு வித்யாலயா நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை தாங்கினார். தொடர்ந்து 3 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
இதில் பெரியநாயக்கன் பாளையம், சர்கார் சாமகுளம் மற்றும் காரமடை ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த யோகாசனத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் 2 ஆயிரத்து 847 மாணவ மாணவிகள் பத்மாசனம், பரிவத்தாசனம், வஜ்ராசனம், உஸ்டாசனம், யோகமுத்ரசனம் ஆகிய 5 யோக ஆசனங்களை செய்து உலக சாதனை படைத்தனர்.
5 யோகாசனங்களை ஒரே மாதிரி செய்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை ஹாங்காங் உலக யோகா விளையாட்டு அமைப்பு நிறுவனத் தலைவர் யுவ தயாளன் வழங்கினார்.
இதில் மாருதி உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாய்குமார், முரளி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் தங்கமணி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X