search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வில்லியனூர் அருகே பாம்பு கடித்ததில் விவசாயி பலி

    வில்லியனூர் அருகே விவசாய நிலத்தை பார்வையிட சென்ற போது பாம்பு கடித்ததில் விவசாயி பலியானார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). விவசாயி. இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

    நேற்று முன்தினம் ஆறுமுகம் உருவையாறு வாய்க்கால்மேட்டில் உள்ள தனது மருமகனின் நிலத்தை பார்வையிட சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் ஆறுமுகம் வீடு திரும்பவில்லை. ஆறுமுகத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் தாமதமாக வீட்டுக்கு வருவார் என அவரது குடும்பத்தினர் எண்ணினர்.

    ஆனாலும், ஆறுமுகம் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஆறுமுகம் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது காலில் வி‌ஷபாம்பு கடித்ததற்கான காய வடு இருந்தது.

    இதுகுறித்து அவரது மனைவி கோவிந்தம்மாள் மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் ஏட்டு கருணாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×