என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் மர்ம மரணம்
Byமாலை மலர்14 Feb 2020 4:43 PM GMT (Updated: 14 Feb 2020 4:43 PM GMT)
காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத் துள்ள கரடிஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட சூருளி அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது35). லாரி டிரைவரான இவரது மனைவி நதியா (29). இவர்களுக்கு திருசிகா (7), சக்தி (3) ஆகிய 2 பெண்குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் லாரி டிரைவரான மாதேஸ் தற்போது ஆந்திராவுக்கு லோடு ஏற்றி கொண்டு சென்றுள்ளார். சப்பானிபட்டி உள்ள தனியார் நிறுவனத்தில் நதியா வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் குழந்தைகள் தூங்கிய பின்பு தூக்கில் தொங்கிய நிலையில் நதியா இறந்து கிடந்துள்ளார். இன்று காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து காவேரிபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து நதியாவை யாராவது அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X