என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயக்குமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்
Byமாலை மலர்14 Feb 2020 1:17 PM GMT (Updated: 14 Feb 2020 1:17 PM GMT)
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளி செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4, குரூப்-2 ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக நேற்று முன்தினம் வரை 45 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இடைத்தரகர் ஜெயக்குமார் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதற்கிடையே, குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த பூர்ணிமா தேவி (25), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அனிதா (29), சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளி செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.
சரணடைந்த செல்வேந்திரன் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வர் பிரபாகரன் என்பவரும் சரண் அடைந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X