search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காதலியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு- ஐடி ஊழியர் தற்கொலை

    கோவை வடவள்ளி அருகே காதலியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ஐ.டி. ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள காளிதாஸ் நகரை சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் ஜான் கிறிஸ்டோபர் (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறினார். ஆனால் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால் ஜான் கிறிஸ்டோபர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஜான் கிறிஸ்டோபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×