என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆனைமலை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்14 Feb 2020 11:21 AM GMT (Updated: 14 Feb 2020 11:21 AM GMT)
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் டீசல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தாத்தூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவுசல்யா (வயது 19). இவர்கள் 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 1½ வருடங்கள் ஆகியும் கவுசல்யா கர்ப்பமாகவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கவுசல்யா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் தீ அவரது உடல் முழுவதும் பரவியது. வலி தாங்க முடியால் கவுசல்யா சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயில் இருந்து கவுசல்யாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1½ வருடத்தில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தாத்தூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவுசல்யா (வயது 19). இவர்கள் 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 1½ வருடங்கள் ஆகியும் கவுசல்யா கர்ப்பமாகவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கவுசல்யா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் தீ அவரது உடல் முழுவதும் பரவியது. வலி தாங்க முடியால் கவுசல்யா சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயில் இருந்து கவுசல்யாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1½ வருடத்தில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X