search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஊத்தங்கரை அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    ஊத்தங்கரை அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே உள்ள கதவனி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களின் மகள் அபிநயா (வயது 15). இவள் காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்தநிலையில் நேற்று காலை அபிநயா பள்ளிக்கு செல்வதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றார். இதையடுத்து மகேஸ்வரியும் கூலி வேலைக்கு சென்று விட்டார். ஆனால் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் வீட்டில் அபிநயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×