என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேடப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்13 Feb 2020 10:15 AM GMT (Updated: 13 Feb 2020 10:15 AM GMT)
சேடப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்:
சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அயோத் திப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்வரன், தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (23).
இவர்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு உருவானது.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் உருவானது.
இதில் மனவேதனை அடைந்த மகாலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
சேடப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X