search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சேடப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

    சேடப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம்:

    சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அயோத் திப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்வரன், தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (23).

    இவர்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு உருவானது.

    இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் உருவானது.

    இதில் மனவேதனை அடைந்த மகாலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    சேடப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது.

    Next Story
    ×