search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையில் பணம் கொள்ளை
    X
    கடையில் பணம் கொள்ளை

    ஒட்டன்சத்திரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.1.20 லட்சம் கொள்ளை

    ஒட்டன்சத்திரம் அருகே மளிகை கடையை உடைத்து ரூ.1.20 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம்:

    நெல்லையைச் சேர்ந்தவர் சகாயம். இவர் கடந்த 20 வருடங்களாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மா பட்டியில் மளிகை கடை நடத்தி வருகிறார். தினந்தோறும் இரவு கடையை பூட்டி விட்டு அருகே உள்ள வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். இன்று காலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சகாயத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    Next Story
    ×