என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக புதுச்சேரியில் தீர்மானம்- மனித நேய மக்கள் கட்சி வரவேற்பு
சென்னை:
மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கருப்பு சட்டமான குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) அதனுடன் இணைந்துள்ள கருப்புச் சட்டங்களான என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக புதுச்சேரி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக இருக்கும் என்.ஆர். காங்கிரசும், அ.தி.மு.க.வும் தீர்மானத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளன. இதன் மூலம் இந்தக் கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும் பா.ஜ.க.வுக்கு விசுவாசமாகவும் உள்ளதை வெளிப்படையாக அறிவித்துள்ளன.
ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் பரவாயில்லை எனக் கூறி தீர்மானத்தை உறுதியாக நிறைவேற்றிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை மனித நேய மக்கள் கட்சி சார்பில் மனதார பாராட்டுகிறேன். தொலைபேசி வாயிலாகவும் அவருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்