search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை

    எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டையில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    போரூர்:

    எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டை பாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (55). டிரைவர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே மது குடித்து வந்தார். இதை அவரது மனைவி விமலா கண்டித்தார்.

    இதில் மனவேதனை அடைந்த சேகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×