search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    மதுரையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம்- செல்லூர் ராஜூ அறிக்கை

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (13-ந் தேதி) மாலை 5 மணிக்கு மதுரை காமராஜர் சாலையில் உள்ள அருணாசலம்-கமலம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட துணைச் செயலாளர் தங்கம் தலைமை தாங்குகிறார்.

    கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

    கூட்டத்தில் அமைச்சர்கள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்கும் படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×